யூனியன் பிரதேசமான லடாக்கில் இன்று காலை லேசான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு

தினகரன்  தினகரன்
யூனியன் பிரதேசமான லடாக்கில் இன்று காலை லேசான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு

லடாக்: யூனியன் பிரதேசமான லடாக்கில் இன்று காலை 10.54 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இது குறித்து தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் அச்சமடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் பொருட்சேதம் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை