மெக்சிகோ சிறையில் கைதிகள் மோதல்: 16 பேர் பலி
மெக்சிகோ: மெக்சிகோவில் சிறைக் கைதிகள் மோதலில் 16 பேர் பலியானார்கள். மெக்சிகோவில் உள்ள பல சிறைகளில் அளவுக்கதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் போதைப்பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் தொடர்பாக விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைகளில் போதிய வசதிகள் இல்லாததால் கைதிகள் ஒருவருக்கு ஒருவர் சண்டை போடுவதும் வழக்கமாக இருந்தது.
இந்நிலையில் ஜகாடெகாஸ் நகரிலுள்ள செரெரெஸ்கோ பகுதியில் அமைந்துள்ள சிறையில் ஆத்திரமடைந்த கைதிகள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் மோதலாக மாறியது.
இதில் 16 கைதிகள் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர் என கூறப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் கைதிகளிடம் துப்பாக்கி, மற்றும் கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்