எல்லை தாண்டி மீன்பிடித்தால் ரூ.50,000 அபராதம் விதிக்க அதிரடி முடிவு

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
எல்லை தாண்டி மீன்பிடித்தால் ரூ.50,000 அபராதம் விதிக்க அதிரடி முடிவு

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பது என, அம்மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மற்றும் நாகை மீனவர்கள் 86 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இந்நிலையில், காரைக்கால் மாவட்ட மீனவப் பிரதிநிதிகளின் கூட்டம், மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெற்றது. இதில், இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவும், அனைத்து படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக அரசிடம் முறையிடவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இந்திய எல்லையினை தாண்டி மீன்பிடித்தது தெரியவந்தால், ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும், ஒரு மாதத்திற்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. எல்லை தாண்டி செல்வதால்தான் மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்று இலங்கை அரசு கூறி வரும் நிலையில், எல்லை தாண்டி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவப் பிரதிநிதிகள் அறிவித்திருப்பது மீனவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை