இந்திய குடியுரிமை வழங்காவிட்டால் கருணைக் கொலை செய்யுமாறு சேலம் ஆட்சியரிடம் இலங்கை அகதி மனு
சேலம்: இந்திய குடியுரிமை வழங்காவிட்டால் கருணைக் கொலை செய்யுமாறு சேலம் ஆட்சியரிடம் இலங்கை அகதி மனு அளித்ததால் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் தனக்கு குடியுரிமை வழங்குமாறு அகதிகள் முகாமில் வசிக்கும் இளைஞர் கோரிக்கை விடுத்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தங்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக இலங்கை அகதிகள் வேதனை தெரிவித்தனர்.