மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு

தினகரன்  தினகரன்
மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு

மதுரை: மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் அறிவிப்பை வெளியிட கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். 2016-ம் ஆண்டு அக். முதல் உள்ளாட்சி பதவிகள் காலியாக இருந்தும் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் விரும்பவில்லை. தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்துக்கு தமிழக தேர்தல் ஆணையம் தவறான தகவல்கள் வழங்கி வருகிறது. மாநகராட்சி, நகராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர முறையான உள்ளாட்சி நிர்வாகம் அவசியம் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை