நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்

தினமலர்  தினமலர்
நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ், தர்பார் ஆடியோர வெளியீட்டு விழாவில் கமல் பற்றிய பேசியது தொடர்பாக, கமலை நேரில் சந்தித்து நேற்று விளக்கம் அளித்தார். அவர் கமலிடம் பேசியதையும், கமலுடன் எடுத்துக் கொண்ட போட்டோவையும் லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில் இன்று (டிச.,15) மற்றொரு டுவிட்டை பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பது,

நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். இதுவரை என்வைத்தான் தவறாக பேசி கொண்டிருந்தார்கள். இப்போது தாய் தந்தையரைப் பற்றியம் மிக தவறாக பேசுகிறார்கள். மொழியை ஒரு போர்வையாக பயன்படுத்திக் கொண்டு தவறாக பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும்.

நான் ஒரு தனி மனிதன். எனக்கென்று தனிக் கூட்டமில்லை. நான் படிக்காதவன். ஒரு தனி மனிதனாய் நின்று, "அன்புதான் தமிழ்" என்கிற அரசியல் சார்பற்ற ஒரு சேவை அமைப்பை தொடங்குகிறேன். இந்த அமைப்பின் மூலம், தமிழரின் மாண்பையும், தமிழரின் பண்பையும், தமிழரின் அன்பையும் உலகறிய செய்வதே அதன் நோக்கம்.

இன்னார் செய்தாரை ஒருத்தல் அவர் நாண, நன்னயம் செய்துவிடல் என்பது திருக்குறள். அதை பற்றியே...எதிரிக்கும் உதவி செய். பிறர் துன்பங்களை உன் துன்பயமாக நினை. நாமெல்லாம் உருவத்தால்தான் வெவ்வேறு. உள்ளதால் ஒன்றே. கடவுளை வெளியே தேடாதே உனக்குள் இருக்கிறார். எனக்கு இது போதும் என்று நினை ஆசையை விடு. அள்ளிக்கொடு. ஆண்டவன் உன் பக்கம்.

அந்த ஆண்டவன் இருப்பது உண்மையானால், தர்மம் இருப்பது உண்மையானால் என் வழி உண்மையானால் நான் துவங்கும் இந்த அறம் சார்ந்த சேவை அமைப்பிற்கு இந்த பிரபஞ்ச சக்தி துணை நிற்கும்.

இறுதியாக ஒன்று...என்னை தவறாக பேசிக் கொண்டிருப்பவர்களும், அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை