ஒருநாள் கிரிக்கெட் போட்டி: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

தினகரன்  தினகரன்
ஒருநாள் கிரிக்கெட் போட்டி: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

சென்னை: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 289 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்துள்ளது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள்  அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு இந்திய தீவுகள் அணி களமிறங்க உள்ளது. மேலும் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சிரேயாஸ் ஐயர் 70 ரன்கள், ரிஷப் பண்ட் 71 ரன்களும் எடுத்து குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை