ஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கும் ஆஷிக் அபு
மலையாள சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் தான் ஆஷிக் அபு. 22 ஃபீமேல் கோட்டயம் படத்திலிருந்து சமீபத்தில் வெளியான மாயநதி, வைரஸ் உள்ளிட்ட இவரது அனைத்து படங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத புதிய கதைகளையும் கதைக்களங்களையும் கொண்டிருக்கும். அதேபோல மலையாள சினிமாவின் மிக முக்கியமான கதாசிரியர் ஷ்யாம் புஷ்கரன். தற்போது இந்த இருவருக்கும் பாலிவுட்டில் ஷாருக்கான் இடம் இருந்து அழைப்பு வந்துள்ளது..
ஆம்.. ஷாருக்கானின் அடுத்த படத்தை ஆஷிக் அபு இயக்க, ஷ்யாம் புஷ்கரன் இந்த படத்திற்கு கதை எழுதுகிறார். ஆஷிக் அபுவின் சமீபத்திய வெளியீடான வைரஸ் படத்தை பார்த்து பிரமித்துப்போய் தான் இந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்துள்ளார் ஷாருக்கான். சமீபத்தில் இவர்கள் இருவரும் மும்பை சென்று ஷாருக்கானை சந்தித்து கதை பற்றி விவாதித்து விட்டு வந்துள்ளனர். ஷாருக்கானுடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார் ஆஷிக் அபு.