சட்டவிரோத துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் கைது!

TAMIL CNN  TAMIL CNN
சட்டவிரோத துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் கைது!

சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரடியனாறு – பெரியபுல்லுமலை, பனிச்சேனை பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். The post சட்டவிரோத துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் கைது! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை