காங்கிரஸ் அமைச்சர் நிதின் ராவுத் அறிவிப்பு: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மகாராஷ்டிராவில் அமலாகாது

தினகரன்  தினகரன்
காங்கிரஸ் அமைச்சர் நிதின் ராவுத் அறிவிப்பு: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மகாராஷ்டிராவில் அமலாகாது

மும்பை: மகாராஷ்டிராவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா அமல்படுத்தப்படாது என்று காங்கிரஸ் அமைச்சர் நிதின் ராவுத் நேற்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது; குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. அதனால், இந்த மசோதாவை மகாராஷ்டிராவில் அமல்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது. இந்த பிரச்னையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார். குடியுரிமை மசோதாவுக்கு மக்களவையில் சிவசேனா ஆதரவளித்த போதிலும் மாநிலங்களவையில் அக்கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. சிவசேனாவின் இந்த நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் கட்சி விவாதித்தது. மாநிலங்களவையில் சிவசேனா எடுத்த நிலைப்பாட்டின்படியே முதல்வர் உத்தவ் தாக்கரே நடந்து கொள்வார் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை