‘இன்னைக்குன்னு பார்த்து ஷேவிங் எல்லாம் பண்ணிட்டு வந்தேனே...’பலான வீட்டில் சிக்கிய 70 வயது ‘வாலிபர்’

தினகரன்  தினகரன்
‘இன்னைக்குன்னு பார்த்து ஷேவிங் எல்லாம் பண்ணிட்டு வந்தேனே...’பலான வீட்டில் சிக்கிய 70 வயது ‘வாலிபர்’

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்  பேரூர்கடை போலீஸ் சரகத்துக்கு  உட்பட்ட குடப்பனக்குன்னு பகுதியில் உள்ள  ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து போலீசார் அந்த வீட்டை கண்காணித்து வந்தனர்.  அப்போது அடிக்கடி  அந்த வீட்டுக்கு காரில் பெண்கள் உள்பட பலர் வந்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து  நேற்று முன்தினம் இரவு பேரூர்கடை போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது   வீட்டில் இருந்த சிலர் பின்பக்க வாசல் வழியாக தப்பி ஓடினர். அதில் ஒரு  பெண்ணை  போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். ஆனால் மற்றவர்கள் தப்பி  விட்டனர். மேலும் வீட்டில் இருந்த மாலத்தீவை  சேர்ந்த 70 வயது  முதியவர், திருவனந்தபுரம் மற்றும் கொச்சியை சேர்ந்த 2  இளம்பெண்கள் கைது  செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் ஆன்-லைனில் விளம்பரம் செய்து பாலியல் தொழில்  நடத்தி வந்தது தெரியவந்தது. இந்த விளம்பரத்தை பார்த்துதான் 70 வயது   முதியவர் வந்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும்  திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மூலக்கதை