பள்ளி மாணவியருக்கு தொடர்ந்து தொந்தரவு: ‘ஈவ் டீசிங்’ வாலிபருக்கு செருப்படி... கான்பூர் பெண் போலீஸ் வீடியோ வைரல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பள்ளி மாணவியருக்கு தொடர்ந்து தொந்தரவு: ‘ஈவ் டீசிங்’ வாலிபருக்கு செருப்படி... கான்பூர் பெண் போலீஸ் வீடியோ வைரல்

கான்பூர்: உத்தரபிரதேச பள்ளி மாணவிக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்த ‘ஈவ் டீசிங்’ வாலிபரை பிடித்து, கான்பூர் பெண் போலீஸ்காரர் ஒருவர் செருப்பால் அடித்து துவைத்த சம்பவ வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே பள்ளிக்கு சென்று கொண்டிருந்த இரு சிறுமிகளை கிண்டல் செய்த வாலிபரை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸார் சரமாரியாகத் தாக்கினார்.

பிதூர் எனுமிடத்தில் நடத்த இச்சம்பவத்தில், ‘தாய் மற்றும் சகோதரிகள் உனக்கு இல்லையா?’ என்று கேள்வி எழுப்பியபடி ஒரு பெண் போலீஸ்காரர், தனது செருப்பை கழற்றி அந்த வாலிபரை சரமாரியாக அடித்தார். பொது இடத்தில் நடந்த இச்சம்பவத்தை, அப்பகுதியில் இருந்த மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.



இருந்தும், அந்த பெண் போலீஸ்காரர் குறிப்பிட்ட சில நிமிடங்கள் அந்த வாலிபரை செருப்பால் அடித்து துவைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்து, கான்பூர் போலீஸ் எஸ்பி அனில்குமார் கூறுகையில், ‘‘சம்பந்தப்பட்ட பள்ளியின் அருகே மாணவிகளுக்கு சிலர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர்.

அதன் அடிப்படையில் எங்களுக்கு புகார் அளிக்கப்பட்டது. எனவே உடனடியாக அந்த பள்ளி அருகே பாதுகாப்பை பலப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுத்தோம்.

கைது செய்யப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ெதாடர்ந்து, பள்ளி மாணவிகளுக்கு தொந்தரவு ெகாடுக்கும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

.

மூலக்கதை