மாடு குறுக்கே பாய்ந்ததால் பைக் கவிழ்ந்தது: தாய் பரிதாப சாவு; மகன் காயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாடு குறுக்கே பாய்ந்ததால் பைக் கவிழ்ந்தது: தாய் பரிதாப சாவு; மகன் காயம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மாடு குறுக்கே பாய்ந்ததால் பைக் கவிழ்ந்து தாய் பரிதாபமாக இறந்தார். மகன் காயம் அடைந்தார்.

திருவள்ளூர் அடுத்த திருமழிசை பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன் மகன் கணேசன் (30). இவர், நேற்று முன்தினம் இரவு தனது தாய் சரோஜாவுடன் (56), பைக்கில் திருவள்ளூர் நோக்கி சென்றார்.

அரண்வாயல் பீர் கம்பெனி அருகே சென்றபோது திடீரென ஒரு மாடு சாலையின் குறுக்கே வந்தது. இதை சற்றும் எதிர்பாராததால் திடீர் பிரேக் போட்டபோது, நிலைதடுமாறி மாடு மீது பைக் மோதியது.

இதில் இருவரும் கீழே விழுந்தனர். சரோஜாவுக்கு தலை, மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தார்.

கணேசன் லேசான காயங்களுடன் தப்பினார்.

தகவலறிந்து வெள்ளவேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சரோஜாவை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியில் சரோஜா இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மகன் கண்ணெதிரே தாய் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


.

மூலக்கதை