கும்மிடிப்பூண்டி அருகே ஊராட்சி தலைவர் பதவிக்கு மேளதாளத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கும்மிடிப்பூண்டி அருகே ஊராட்சி தலைவர் பதவிக்கு மேளதாளத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள், 26 ஒன்றிய கவுன்சிலர்கள், 3 மாவட்ட கவுன்சிலர்கள், 456க்கும் மேற்பட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான விருப்ப மனு தாக்கல் நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடங்கியது. அன்று, கும்மிடிப்பூண்டி ஒன்றிய ஆணையர் சாமிநாதன் மேற்பார்வையில் ஊராட்சி தலைவர் பதவிக்காக 3 மனுக்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக 43 மனுக்கள் பெறப்பட்டது.

நேற்று பூவலம்பேடு ஊராட்சி வாணியமல்லி காலனியை சேர்ந்த மதுரைவீரன் என்பவர் மட்டும், 100க்கும் மேற்பட்டவர்களுடன் மேளதாளத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.

பின்னர், ஊராட்சி தலைவர் பதவிக்காக உதவி தேர்தல் அலுவலர் ஹேமலதாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மேலும் அவருடன் அவரின் மனைவி சரண்யாவும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

.

மூலக்கதை