தேனி எம்.பி. ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
தேனி எம்.பி. ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தேனி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தலின்போது வாக்காளர்களுக்கு அதிக பணம் வழங்கி ரவீந்திரநாத் வெற்றி பெற்றுள்ளதாக மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், ஜனவரி 23-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ரவீந்திரநாத்-திற்கு இறுதி அவகாசம் வழங்கியுள்ளது.

மூலக்கதை