காரைக்குடி அருகே மழைநீரில் மூழ்கிய 50 ஏக்கர் நெற்பயிர் சேதம்
சிவகங்கை: காரைக்குடி அருகே செவரக்கோட்டை கிராமத்தில் மழைநீரில் மூழ்கிய 50 ஏக்கர் நெற்பயிர் அழிந்து நாசமானது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.