கர்நாடகவில் சட்டவிரோதமாக பயிரிட்ட 90 கிலோ கஞ்சா செடி பறிமுதல்..ஒருவர் கைது
பெங்களூரு: கலாபுராகி மாவட்டத்தில் நரியன்பூர் கிராமத்தில் போலீசார் இன்று சோதனை நடத்திய போது சட்டவிரோதமாக பயிரிட்ட 90 கிலோ கஞ்சா செடிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.