படப்பிடிப்புக்கு மூன்று மாதங்கள் குட்பை சொல்லும் பிரித்விராஜ்

தினமலர்  தினமலர்
படப்பிடிப்புக்கு மூன்று மாதங்கள் குட்பை சொல்லும் பிரித்விராஜ்

பிரித்விராஜ் தற்போது மலையாள திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருகிறார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது அய்யப்பனும் கோசியும் என்கிற படத்தில் நடித்து வந்த பிரித்திவிராஜ் அந்த படத்தையும் தற்போது முடித்து விட்டார். இதையடுத்து இனி மூன்று மாதங்களுக்கு தான் எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ள போவதில்லை என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பயப்படும்படியான எந்த ஒரு காரணமும் இல்லை. பிரித்விராஜ் ஏற்கனவே ஒப்புக்கொண்டு நடித்து வரும் படம் ஆடுஜீவிதம்.. இதை பிரித்விராஜன் கனவு படம் என்றே கூட சொல்லலாம். பிரபல மலையாள இயக்குனர் பிளஸ்சி இயக்கி வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.. இதன் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டன..

இந்த நிலையில் துபாயில் நடைபெறவுள்ள மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக தனது உடல் எடையை பிரித்விராஜ் மெதுவாக குறைக்க வேண்டி இருக்கிறது.. கிட்டத்தட்ட ரொம்பவே இளைத்த தோற்றத்தில் ஒட்டகம் மேய்க்கும் இளைஞனாக அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இதனால் மற்ற படங்களில் நடிப்பதை ஒதுக்கிவைத்துவிட்டு இந்த படத்திற்காக உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராவதற்கு இந்த மூன்று மாத ஓய்வு எனக் கூறியுள்ளார் பிரித்விராஜ்.

மூலக்கதை