திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதத்திற்கான ரூ. 300 ரூபாய் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உள்ளூர், வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்ய வருகின்றனர்.

விசேஷ தினங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். அப்படி வரும் பக்தர்களின் வசதிக்காக ஏழுமலையான் கோயிலில் ரூ. 300க்கான சிறப்பு தரிசன டிக்கெட்கள் 3 மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி ஏற்கனவே பிப்ரவரி மாதத்திற்கான முன்பதிவு முடிவடைந்தது.

இந்நிலையில் மார்ச் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் நாளை முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த டிக்கெட்டுகளை www. ttdsevaonline. com என்ற இணையத்தில் மூலமும், நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தான செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை