கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா முடிவடைந்ததை அடுத்து, அதில் பங்கேற்றவர்கள் தாயகம் திரும்பி  வருகின்றனர். இலங்கை-இந்திய தமிழர்களின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்த இந்தத்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா முடிவடைந்ததை அடுத்து, அதில் பங்கேற்றவர்கள் தாயகம் திரும்பி  வருகின்றனர். இலங்கைஇந்திய தமிழர்களின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்த இந்தத்

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா முடிவடைந்ததை அடுத்து, அதில் பங்கேற்றவர்கள் தாயகம் திரும்பி  வருகின்றனர். இலங்கை-இந்திய தமிழர்களின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்த இந்தத் திருவிழாவில், இருநாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதல் நாளான நேற்று கூட்டுப்பிராத்தனையும், சிலுவைப் பாதை வழிபாடும் நடைபெற்றன. இதில் பங்கேற்ற பக்தர்கள் அமைதி வேண்டி இறைவழிபாடு நடத்தினர். அதுமட்டுமல்லாமல் கச்சத்தீவு திருவிழாவில் ஒன்று கூடிய இருநாட்டுத் தமிழர்கள், ஒருவரையொருவர் ஆரத்தழுவி நலம் விசாரித்தனர். தமிழகத்தில் இருந்து 110 விசைப்படகுகளில் சென்ற, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தற்போது தாயகம் திரும்பி வருகின்றனர். அதேபோல், இலங்கையில் இருந்து வந்திருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் சொந்த ஊர் திரும்பிச் சென்றனர். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் சிறிதுகாலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தோணியார் கோவில் திருவிழா, 2010ம் ஆண்டில் இருந்து மீண்டும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மூலக்கதை