அதிகாரிகளிடம் விவரம் கொடுத்துள்ளேன்: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு உடன்படித்தவர்கள்தான் முக்கிய காரணம்...தந்தை பகீர் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிகாரிகளிடம் விவரம் கொடுத்துள்ளேன்: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு உடன்படித்தவர்கள்தான் முக்கிய காரணம்...தந்தை பகீர் பேட்டி

திருவனந்தபுரம்: சென்னை ஐஐடியில் படித்துவந்த மாணவி பாத்திமா தற்கொலைக்கு சக மாணவர்கள்தான் காரணம் என்று அவரது தந்தை கூறியுள்ளார். கேரள மாநிலம் கொல்லம் கிளிகொல்லூர் பகுதியை சேர்ந்தவர் லத்தீப்.

இவரது மகள் பாத்திமா. இவர் சென்னை ஐஐடியில் படித்து வந்தார்.

கடந்த  மாதம் விடுதியில் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பேராசிரியர் ஒருவர் தான் காரணம் என்று கடிதம் எழுதி  வைத்திருந்தார்.

இதுகுறித்து சென்னை குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த  விவகாரம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

பாத்திமா மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி மாணவர்கள்  போராட்டம் நடத்தினர்.   இந்த நிலையில் மாணவி பாத்திமாவின் பெற்றோர் பிரதமரை சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் இன்று பிரதமரை சந்திக்க  திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே மாணவியின் தந்தை லத்தீப் கூறியது: எனது மகளின் மரணத்துக்கு அவருடன் படிக்கும் சிலர் தான் முக்கிய காரணம்.

 அவர்கள் எனது மகளை மன ரீதியாக தினமும் கொடுமைப்படுத்தி  வந்துள்ளனர். அவர்களது பெயர் விவரங்களை எனது மகள் தெளிவாக குறிப்பிட்டு வைத்துள்ளார்.

அவர்கள் யார்? என்பது எனக்கு தெரியும். இந்த  விவரங்களை நான் விசாரணை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளேன்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.   இல்லாவிட்டால் அவர்கள் ஒவ்வொருவர் மீதும் தனித்தனியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். இன்று பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.   சந்தித்த பின்னர் கூடுதல் விவரங்களை தெரிவிப்பேன்.

இவ்வாறு கூறினார்.

.

மூலக்கதை