15 ஆண்டாக நடந்த சிறுமிகள் பலாத்கார வழக்கு: மாஜி ஜூடோ சாம்பியனுக்கு சிறை...ஆஸ்திரியா நீதிமன்றம் அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
15 ஆண்டாக நடந்த சிறுமிகள் பலாத்கார வழக்கு: மாஜி ஜூடோ சாம்பியனுக்கு சிறை...ஆஸ்திரியா நீதிமன்றம் அதிரடி

வியன்னா: ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவர் பீட்டர் சீசன்பேச்சர் (59). கடந்த 1984, 1988ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தனது  நாட்டிற்காகத் தொடர்ந்து இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.

1989ல் ஓய்வு பெற்றபின், இளம் வீரர்களை ஊக்குவிக்கும் ஸ்போர்ட் லைஃப்  என்ற ஆஸ்திரியாவின் நிதியுதிவித் திட்டத்திற்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 1993ல் ஜூடோ விளையாட்டின் போது, ஒருவரைத் தாக்கியதால் அவர் அப்பதிவியிலிருந்து நீக்கப்பட்டார்.



இதனிடையே, பீட்டர் சீசன்பேச்சர்  1999 - 2004ம் ஆண்டு காலகட்டங்களில் இவர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, வியன்னாவில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம்  செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன்  தொடர்ச்சியாக பீட்டர் சீசன்பேச்சர், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தற்போது நிரூபணம் ஆனதால், கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து  ஆஸ்திரிய நீதிமன்றம் பீட்டர் சீசன்பேச்சருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஆனால், சீசன்பேச்சர் குற்றச்சாட்டுகளை  தொடர்ந்து மறுத்து வருகிறார்.

அவரது ஆரம்ப வழக்கு விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்னர், அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

பல  ஆண்டுகளாக தனது விசாரணையை தாமதப்படுத்திய நிலையில், தற்போது நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.

.

மூலக்கதை