19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டி: தென்னாப்பிரிக்காவில் ஜன. 17ம் தேதி தொடக்கம்...இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டி: தென்னாப்பிரிக்காவில் ஜன. 17ம் தேதி தொடக்கம்...இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு

மும்பை: தென்னாப்பிரிக்காவில் 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. அதற்காக மும்பையில் கூடிய அகில இந்திய  ஜூனியர் தேர்வுக் குழு 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்தது.

வரும் ஜனவரி 17 முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறவுள்ள  இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு உத்தரபிரதேச இளம் வீரர் பிரியம் கார்க் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா தற்போதைய நடப்பு  சாம்பியனாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 16 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டியில் கலந்து கொள்கின்றன.

இந்திய அணியில், பிரியம்  கார்க் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, திவ்யான்ஷ் சக்ஸேனா, துருவ் சந்த் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ஷாஸ்வத் ரவாத், திவ்யான்ஷ்  ஜோஷி, சுபங் ஹெக்டே, ரவி பிஷனோய், ஆகாஷ் சிங், காா்த்திக் தியாகி, அதர்வா அன்கோல்கர், குமார் குஷாக்ரா, சுஷாந்த் மிஸ்ரா, வித்யாதர்  பட்டீல் ஆகிேயார் இடம்பெற்றுள்ளனர்.

ஐதராபாத் வீரர் ரக்ஷன் தென்னாப்பிரிக்க தொடர், நான்கு நாடுகள் போட்டியில் கூடுதலாக இடம் பெற்றுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை