நடிகை அலியாபட் கதறி அழுதார்: என் அக்காவை டார்ச்சர் செய்துவிட்டேன்
மும்பை: என் அக்காவுக்கு நான் நல்ல தங்கச்சியாக இல்லை அவருக்கு ரொம்வே தொல்லை கொடுத்துவிட்டேன் என்று நடிகை அலியாபட் கதறி அழுதார். பாலிவுட் நடிகை அலியாபட்.
பல்வேறு இந்த படங்களில் நடித்திருப்பதுடன் முதன்முறையாக ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் தெலுங்கு படம் மூலம் தென்னிந்திய திரையுலகிற்கு அறிமுகமாகிறார். தனது அக்கா ஷஹீன் பட் உடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் அலியாபட்.
அப்போது அலியாபட் கூறியதாவது:கடந்த 26 வருடமாக எனது அக்கா ஷஹீன் உடன் நான் வாழ்ந்து வந்தாலும் அவர் என்ன விதமான கஷ்டத்துக்குள்ளாகி யிருக்கிறார் என்பதை நான் அறிந்திருக்கவில்ைல. அவர் எழுதிய ‘எப்போதும் நான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை’ என்ற புத்தகத்தை படித்தபிறகுதான் அவரைப்பற்றி என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
அவருக்கு நான் ெதால்லை கொடுத்து டார்ச்சர் செய்த தங்கையாகவே இத்தனை நாள் வாழ்ந்திருக்கிறேன் (இவ்வாறு அலியாபட் பேசியபோது கதறி அழுதார். அருகில் இருந்த சகோதரி ஷஹீன் அலியாவுக்கு ஆறுதல் கூறினார்).
ஷஹீனை நான் புரிந்துகொள்ளாமலேயே வாழ்ந்திருக்கிறேன். என்னுடைய குடும்பத்திலேயே ஷஹீன்தான் மிகவும் புத்திசாலி என்று நான் நம்புகிறேன். ஒரு கட்டம் வரை அவர் தனக்கு தானே நம்பிக்கை இல்லாதவராக இருந்தார்.
அது என் மனதை நொறுக்கியது. நான் ரொம்பவும் உணர்ச்சிவசப்படுபவள். ஆனால் அவரை (ஷஹீன்) புரிந்துகொள்ளாமலிருந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வுடன் இப்போதும் இருக்கிறேன்.
இவ்வாறு அலியாபட் கூறினார்.