சர்ச்சில் பயங்கரவாதிகள் தாக்குதல் ; 14 பேர் பலி

தினமலர்  தினமலர்
சர்ச்சில் பயங்கரவாதிகள் தாக்குதல் ; 14 பேர் பலி

ஒவ்கடங்கு : பர்கினோ பாசோ நாட்டில் சர்ச்சில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான பர்கிவோ பாசோவில் உள்ள ஹண்டொகுவோரா பகுதியில் அமைந்துள்ள சர்ச் ஒன்றில் நேற்று சில பயங்கரவாதிகள் புகுந்தனர். சர்ச்சில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது அங்கிருந்தவர்களை பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தாக்குதலை தடுக்க வந்த பாதுகாப் புபடை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இதே போன்று கடந்த அக்டோபரில் பர்கினோ பாசோ நாட்டில் உள்ள மசூதி ஒன்றில் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை