அனைத்து இலங்கையர்களுக்கும் நாம் 16 பேரும் சேவை செய்வோம் – வாழ்த்துச் செய்தியில் மஹிந்த தெரிவிப்பு

TAMIL CNN  TAMIL CNN
அனைத்து இலங்கையர்களுக்கும் நாம் 16 பேரும் சேவை செய்வோம் – வாழ்த்துச் செய்தியில் மஹிந்த தெரிவிப்பு

இடைக்கால அரசின் அமைச்சரவையின் அமைச்சர்களுக்கு வாழ்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன், அவர்களோடு சேர்ந்து நாட்டு மக்களுக்குச் சேவை செய்யத் தயாராக உள்ளேன்.” – இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார். இடைக்கால அரசுக்கான அமைச்சரவையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 16 அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் பதவி பிரமாணம் செய்துக்கொண்டனர். இந்தநிலையில், அவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். The post அனைத்து இலங்கையர்களுக்கும் நாம் 16 பேரும் சேவை செய்வோம் – வாழ்த்துச் செய்தியில் மஹிந்த தெரிவிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை