மக்களவை சபாநாயகர் கோபம்

தினகரன்  தினகரன்
மக்களவை சபாநாயகர் கோபம்

மக்களவையில் பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் எம்பி ரவ்னீத் சிங் பிட்டு, சோனியா காந்தி குடும்பத்தினருக்கு மீண்டும் எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்பு தர வேண்டுமென வலியுறுத்தி பேசினார்.  அவர் பேசத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இடைமறித்து நிறுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘ஏற்கனவே இதைப் பற்றி பலர் பேசி விட்டார்கள். அடுத்த உறுப்பினர் பேசலாம்,’’ என்றார். உடனே, பிட்டு, ‘‘நீங்களும் அவர்களோடு கைகோர்த்து விட்டீர்களா?’’ என பாஜ.வுடன் சபாநாயகர் கூட்டு சேர்ந்ததாக மறைமுகமாக குற்றம்சாட்டினார். இதனால் கோபமடைந்த சபாநாயகர், அடுத்த உறுப்பினர் பேச முயன்றதையும் நிறுத்திவிட்டு, ‘‘சபாநாயகர் பற்றி இதுபோன்று பேசாதீர்கள். நீங்கள் பேச இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்,’’ என அதிருப்தியோடு கூறினார்.

மூலக்கதை