சியாச்சினில் சுற்றுலா தலம் இந்தியா திட்டத்துக்கு பாக். எதிர்ப்பு

தினகரன்  தினகரன்
சியாச்சினில் சுற்றுலா தலம் இந்தியா திட்டத்துக்கு பாக். எதிர்ப்பு

இஸ்லாமாபாத்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மாதம் 21ம் தேதி அளித்த பேட்டியில், ‘சியாச்சின் அடிவார பகுதியில் உள்ள குமார்  போஸ்ட் முகாமை சுற்றுலாவுக்கு பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது,’ என அறிவித்தார். இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகமது பைசல் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியா வலுக்கட்டாயமாக சியாச்சின்  பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இது சர்ச்சைக்குரிய பகுதி. இந்த இடத்தை எப்படி இந்தியா சுற்றுலாவுக்கு திறக்க முடியும்? இந்தியாவிடம் இருந்து எந்த  நல்ல விஷயத்தையும் பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை’’ என்றார்.

மூலக்கதை