சேவை வரி உயர்வுக்கு எதிர்ப்பு: மோடியின் உருவபொம்மை எரிப்பு
பட்ஜெட்டில் சேவை வரி உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், சமாஜ்வாதி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசின் இந்த அறிவிப்பினால் விவசாயிகள், ஏழைகள் அதிருப்தியடைந்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். அப்போது, பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்த போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களிட்டனர்.