துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் குவிக்கும் இந்திய 'மங்கைகள்'

தினமலர்  தினமலர்
துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் குவிக்கும் இந்திய மங்கைகள்

பீஜிங் : சீனாவில் நடக்கும் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய பெண்கள், பல்வேறு பிரிவுகளில் தங்கம் பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகின்றனர்.


உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் இறுதி சுற்று போட்டிகள் சீனாவின் புதியான் நகரில் நடைபெற்று வருகின்றன. அதில் மகளிருக்கான 10 மீட்டர் ஜூனியர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த 17 வயதான மனு பாக்கர் தங்கம் வென்றார். அதுமட்டுமின்றி 244.7 புள்ளிகளை பெற்ற அவர், இளையோர் பிரிவில் உலக அளவில் புதிய சாதனையையும் படைத்துள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மனு பாக்கர், ஹீனா சித்துவுக்கு பிறகு 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவின் 2வது பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.


இதனைத் தொடர்ந்து நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவனும் தங்கம் வென்றுள்ளார். இவர் 250.8 புள்ளிகளை பெற்றுள்ளார். இதன் மூலம் நடப்பாண்டில் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளது. உலகத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய பெண்கள் தங்க பதக்கங்களை குவித்து வருவது பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

மூலக்கதை