வருத்தம் தெரிவித்த வாட்ஸ்அப்

தினகரன்  தினகரன்
வருத்தம் தெரிவித்த வாட்ஸ்அப்

புதுடெல்லி: கடந்த மாதம் இந்திய பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் 121 பேர் உள்பட உலகம் முழுவதும் 1,400 பேரின் வாட்ஸ்அப் தகவல்கள் இஸ்‌ரேலின் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக பேஸ்புக் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. இந்நிலையில், வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், `‘இந்தியாவில் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் மற்றும் பாதுகாப்பில் அரசு எதிர்பார்த்த பாதுகாப்பை வழங்க தவறியதற்கு வருந்துகிறோம். இனிமேல், இதுபோன்று நடக்காதவாறு செயல்படுவோம்\' என்று கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை