3 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு

தினமலர்  தினமலர்
3 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு

புதுடில்லி: இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் பயிற்சிக்காக, மூன்று ரபேல் போர் விமானங்கள், நேற்று ஒப்படைக்கப்பட்டன.ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து, 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க, 2016ல் ஒப்பந்தம் போடப்பட்டது.
முதல் ரபேல் போர் விமானம், கடந்த அக்.8ல், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், முதல் தவணையாக, நான்கு ரபேல் விமானங்கள், 2020ல், ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய விமானப்படை பைலட்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, மூன்று ரபேல் போர் விமானங்களை, அந்நிறுவனம் நேற்று ஒப்படைத்தது. 'பிரான்சில் உள்ள நமது வீரர்கள், இந்த விமானத்தில் பயிற்சி மேற்கொள்வர்' என, தெரிவிக்கப்பட்டது.


மூலக்கதை