தென்னை மறுநடவு பணிக்கு 9 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
தென்னை மறுநடவு பணிக்கு 9 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தென்னை வளர்ச்சி வாரியத்தின் கீழ், தென்னை மறு நடவு மற்றும் அதனை பராமரிக்க ரூ.9 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக  சிவகங்கை, மதுரை, நாமக்கல், திருச்சி, தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது, இதற்காக ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 2 ஆயிரம் ஹெக்டேர் தென்னை பயிரிடப்பட்டு தேங்காய் உற்பத்தி செய்யப்படும்.

மூலக்கதை