5 போட்டிகளில் 3 டிரா, 2 தோல்வி: ஃபிபா தகுதியை இழந்தது இந்தியா

தமிழ் முரசு  தமிழ் முரசு
5 போட்டிகளில் 3 டிரா, 2 தோல்வி: ஃபிபா தகுதியை இழந்தது இந்தியா

மஸ்கட்: ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2022ல் கத்தாரில் நடைபெறவுள்ளது. நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்  இந்தத் தொடரில் விளையாடுவதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் கண்டங்கள் ரீதியாக நடைபெற்றுவ ருகிறது.

ஆசிய கண்டங்களுக்கான தகுதிச்சுற்றின் குரூப் இ பிரிவில் இந்தியா, ஓமன், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், கத்தார் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்திய அணி ஓமன் அணியுடனான முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

அதன்பின், கத்தார், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் டிரா செய்தது. இந்நிலையில், மஸ்கட்டில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, ஓமன் அணியை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் ஓமன் வீரர் ஹோசின் -அல்- கசானி கோல் அடித்து அசத்தினார். அதன்பின், இந்திய அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.

அதனால், 0-1 என்ற கோல் கணக்கில் ஓமனிடம் இரண்டாவது முறையாக இந்தியா தோல்வியுற்றது.

இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளில் 3 டிரா, 2 தோல்வி என 3 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. ஓமன் அணியுடன் விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வி என 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

குரூப் - இ பிரிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளே தகுதிச் சுற்றின் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறுவர். அதன்படி, இந்திய அணி அடுத்து விளையாடவுள்ள 3 போட்டிகளில் வெற்றிபெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது சந்தேகம்தான்.

இதனால், இந்திய அணி ஃபிபா உலகக்கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளது.

கால்பந்து அணி, ஃபிபா தொடருக்குள் நுழைவதற்கான தகுதியையே இழந்து இருப்பது இந்திய கால்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில்  அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

.

மூலக்கதை