சென்னையில் ஓடும் ரயிலில் கொள்ளை முயற்சி

தினகரன்  தினகரன்
சென்னையில் ஓடும் ரயிலில் கொள்ளை முயற்சி

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து ஜெய்ப்பூர் புறப்பட்ட ரயிலில் பயணிகளிடம் கத்திமுனையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. பயணிகள் கூச்சலிட்டதால் சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி தப்பியோடியுள்ளனர். திருடர்கள் தப்பியோடியதால் கொருக்குப்பேட்டை அருகே 5 நிமிடங்கள் ரயில் நிறுத்தப்பட்டது.

மூலக்கதை