பாகிஸ்தான் அணியில் ஓரங்கட்டப்பட்ட மாஜி கேப்டன் சர்ப்ராஸ் ‘கம்பேக்’.. பிரதமர் இம்ரான் கான் ஆதரவால் வாய்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தான் அணியில் ஓரங்கட்டப்பட்ட மாஜி கேப்டன் சர்ப்ராஸ் ‘கம்பேக்’.. பிரதமர் இம்ரான் கான் ஆதரவால் வாய்ப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவரும், பயிற்சியாளருமான முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக், அணியில் பல அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறார். சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரில் சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி 0-3 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது.

அதனால் அவர் கேப்டன் பதவியிலிருந்து மட்டுமின்றி அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக டி20, ஒருநாள் போட்டிகளில் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டார்.

டெஸ்ட் போட்டியின் கேப்டனாக அசார் அலி அறிவிக்கப்பட்டார். பாகிஸ்தான்  அணிக்காக 49 டெஸ்ட், 116 ஒருநாள், 58 சர்வதேச டி20 போட்டிகளில்  விளையாடியுள்ள சர்ப்ராஸ் அகமது, இதுவரை 5,771 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால், சர்ப்ராஸ் அகமது மீண்டும் அணியில் சேர்க்கப்படுவாரா அல்லது தொடர்ந்து அணியிலிருந்து ஓரம்கட்டப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி  மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி டி20 தொடரை 0-2 என்ற  கணக்கில் தோற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல்  டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (நவ.

21) பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமரும் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் கூறுைகயில், “சர்ப்ராஸ் அகமது அணியில் சேர வேண்டும் என்றால் உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும்.

சிறப்பாக விளையாடினால் நிச்சயம் பாகிஸ்தான் அணியில் ‘கம்பேக்’ தருவார். டி20 போட்டியை கொண்டே ஒரு வீரரின் ஆட்டத்திறனை தீர்மானிக்க முடியாது.

பாகிஸ்தான் அணி பயிற்சியாளராக மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டதன் மூலம், அணியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

.

மூலக்கதை