வரும் 25-ம் தேதி காலை 9.28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தகவல்

தினகரன்  தினகரன்
வரும் 25ம் தேதி காலை 9.28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி47 ராக்கெட் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தகவல்

பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்த பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் வரும் 25-ம் தேதி காலை 9.28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டு்ள்ளது. இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் 13 வணிக நானோ வகை செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் எக்ஸ் எல் வகையில் 21-வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 74-வது ராக்கெட் என்ற பெருமையை இந்த ராக்கெட் பெறும் என கூறப்படுகிறது. பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக விண்ணில் ஏவப்படும் கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மேம்படுத்தப்பட்ட வகை செயற்கைக்கோளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது துல்லியமாக படங்களை அனுப்பும் திறன் கொண்டது என கூறப்பட்டு்ளளது. இந்த செயற்கைக்கோள் 509 கிலோ மீட்டர் உயரத்தில் புவிவட்ட சுற்றுப்பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட உள்ள 13 நானோ வகை செயற்கைகோள்கள் அமெரிக்கா நாட்டை சேர்ந்தவையாகும் என கூறப்பட்டுள்ளது. தற்போது ராக்கெட்டை பொருத்தும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதற்கான கவுண்ட்டவுன் வரும் 23-ம் தேதி தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை