பார்லிமென்ட் அருங்காட்சியகமாகிறதா?

தினமலர்  தினமலர்
பார்லிமென்ட் அருங்காட்சியகமாகிறதா?

டில்லியில், ராஷ்டிரபதி பவனுக்கு அருகில் உள்ள, பார்லிமென்ட் வளாகமும், அதை ஒட்டி அமைந்துள்ள அரசு அலுவலகங்களும் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட உள்ளன. இதற்காக, குஜராத் நிறுவனம் ஒன்றுடன், மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.



இந்நிலையில், இப்போதுள்ள பார்லிமென்ட் கட்டடத்தை இடிக்கக் கூடாது என, எதிர்க்கட்சியினர், தே.ஜ.கூ., அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இடிக்க மாட்டோம் என, மத்திய அரசும் சொல்லியிருக்கிறது. இது குறித்து, ஒரு சீனியர், பா.ஜ., தலைவரிடம் பேசிய போது, 'ராஷ்டிரபதி பவனுக்கு அருகில் உள்ள பிரதமர் அலுவலகம், நிதி மற்றும் உள்துறை அமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக், பாதுகாப்பு அமைச்சகம் அமைந்துள்ள சவுத் பிளாக் ஆகிய கட்டடங்கள் முற்றிலுமாக மாற்றப்பட உள்ளன. 'இப்போதுள்ள பார்லிமென்ட் கட்டடத்தை இடிக்காமல், அது, அருங்காட்சியகமாக மாற்றப்படும்.


இங்கு பார்வையிட வரும் மக்கள், இந்திய வரலாற்றை பார்க்கலாம்' என்கிறார் அவர். அதே நேரத்தில், பார்லிமென்டிற்கு, புதிய கட்டடம் கட்டப்பட உள்ளதாம். 'பிரதமர் அலுவலகம் உட்பட முக்கிய அரசு அலுவலங்கங்கள், நவீன முறையில் கட்டப்பட உள்ளன. 'இதற்காக, ராஷ்டிரபதி பவனுக்கு அருகில், இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வரும், 2024ல், அடுத்த லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள், புதிய பார்லிமென்ட் காம்ப்ளக்ஸ் கட்டி முடிக்கப்படும்' என்கிறார் அந்த தலைவர்.

மூலக்கதை