இலங்கை தேர்தல் நிலவரம் ; பிரேமதாச முன்னிலை

தினமலர்  தினமலர்
இலங்கை தேர்தல் நிலவரம் ; பிரேமதாச முன்னிலை

கொழும்பு : இலங்கையின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பிரேமதாச முன்னிலை வகிக்கிறார்.


அண்டை நாடான இலங்கையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில், 35 பேர் போட்டியிட்டாலும், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபயா ராஜபக்சே, 70, ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாசா, 52, ஆகியோருக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போதைய அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. காலை, 7:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது.

இந்த தேர்தலில், 1.6 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். இதற்காக, நாடு முழுவதும், 12 ஆயிரத்து, 845 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பதற்றம் நிறைந்த ஓட்டுச் சாவடிகளுக்கு, பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், பாதுகாப்பு படையினர், சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி, ஓட்டளிக்க விடாமல் இடையூறு ஏற்படுத்தியதாகவும் புகார் கூறப்பட்டது. ஒரு சில சிறிய சம்பவங்களை தவிர, பெரும்பாலான இடங்களில் அமைதியாகவே தேர்தல் நடந்தது.


சஜித் பிரேமதாசா, அம்பந்தோட்டையிலும், கோத்தபயா, கொழும்பு விலும், தங்கள் ஓட்டுகளை செலுத்தினர். விறு விறுப்பாக நடந்த ஓட்டுப் பதிவு, மாலை, 5:00 மணிக்கு முடிவடைந்தது. தேர்தலில், 81 சதவீத ஓட்டுகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் ஓட்டு எண்ணும் பணி தற்போது நடந்து வருகிறது. அதன்படி,


புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளரான சஜித் பிரேமதாச 56.46 சதவீதம் ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கோத்தபய 35.85 சவீதம் பெற்று பின்னடைவில் உள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தொகுதிகளில் பிரேமதாச முன்னிலையிலும், காலி, மொனராகலை, கம்பகா, ரத்தினகிரி தொகுதியில் கோத்தபய முன்னிலையிலும் உள்ளனர்.

மூலக்கதை