எஸ்.இ.இசட்., நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் கோருகின்றன
புதுடில்லி:மத்திய அரசிடம், எஸ்.இ.இசட்., எனப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க, 13 நிறுவனங்கள் அவகாசம் கோரியுள்ளன.‘ஜி.பி., ரியல்டர்ஸ்’ நிறுவனம், குருகிராமில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு வன்பொருள் சாதன துறைக்கான, சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான, ‘கெடு’வை, 2019, நவ., 13 வரை நீட்டிக்குமாறு விண்ணப்பித்துள்ளது.
‘ஜே.பி.எப்., பெட்ரோகெமிக்கல்ஸ்’ நிறுவனம், மங்களூரில், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கிறது. இதற்கான அவகாசம், 15ம் தேதியுடன் முடிவடைவதால், இந்நிறுவனம் கூடுதல் அவகாசம் கோரியுள்ளது.‘அரவிந்தோ பார்மா’ நிறுவனம், நெல்லுாரில், எஸ்.இ.இசட்., அமைக்க, 2019, ஜூலை வரை அவகாசம் கேட்டுள்ளது.
‘கோல்டன் டவர் இன்ப்ராடெக், குமார் பில்டர்ஸ் டவுன்ஷிப் வென்சர்ஸ், க்யூ3 இன்போடெக், டெம்பிள் பேக்கேஜிங், பென்சோ கெம் இண்டஸ்ட்ரீஸ், ஹெலியாஸ் போட்டோ வோல்டெக்’ ஆகிய நிறுவனங்களும் கூடுதல் காலம் அளிக்கக் கோரியுள்ளன.இக்கோரிக்கைகள் குறித்து, டில்லியில் நாளை நடைபெறும், மத்திய வர்த்தக துறை செயலர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.