ஞாபக மறதியால் அப்பாவி இளைஞரை சுட்டு கொன்ற பெண் பொலிஸ் அதிகாரி..!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஞாபக மறதியால் அப்பாவி இளைஞரை சுட்டு கொன்ற பெண் பொலிஸ் அதிகாரி..!!

அமெரிக்காவில் தனது குடியிருப்பு என தவறாக நினைத்து வேறு ஒருவரின் குடியிருப்புக்குள் புகுந்து  பெண் பொலிஸ் அதிகாரி அங்கிருந்தவரை சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகர பொலிஸில் பணிபுரிந்து வரும் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது வீட்டிற்கு திரும்பினார். அவர் டல்லாஸ் நகர் அருகே குடியிருப்பு வளாகம் அமைந்த பகுதிக்கு சென்றார். ஆனால் தவறுதலாக 26 வயதான போத்தம் ஷேம் ஜீன் என்பவரது வீட்டிற்குள் சென்றுள்ளார். 
 
அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் குறித்த பொலிஸ் அதிகாரி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் போத்தம் ஷேமை சுட்டதில் ஷேம் உயிரிழந்தார்.
 
இதன்பின் தகவல் அறிந்து அங்கு சென்ற பொலிஸாரிடம் அந்த பெண் பொலிஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்தியபொழுது, எனது குடியிருப்பு என நினைத்து உள்ளே நுழைந்து விட்டேன் என தெரிவித்துள்ளார்.
 
பெண் பொலிஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் மரணமடைந்த ஷேம் கரீபியன் தீவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர் எனவும் தனியார் கிறிஸ்தவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு டல்லாஸ் நகரில் உள்ள கணக்கியல் துறை சார்ந்த நிறுவனம் ஒன்றில் ஷேம் பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சம்பவத்தினை அடுத்து, பெண் பொலிஸ் அதிகாரியின் இரத்தம் சேகரிக்கப்பட்டு மதுபானம் எதுவும் குடித்துள்ளாரா? என அறிவதற்காக சோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
 
பெண் பொலிஸ் அதிகாரியின் இந்த கொடூர செயலைக் கண்டித்து காவல்துறை தலைமையகம் முன்பு ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 

மூலக்கதை