இந்தோனேஷியாவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம்

தினகரன்  தினகரன்
இந்தோனேஷியாவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம்

ஜகர்தா: இந்தோனேஷியாவில் நேற்று திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  உள்ளூர் நேரப்படி காலை 11.53 மணிக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களிலும் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினார்கள். அம்பான் தீவில் பூமியில் 208 கி.மீ. ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. ஓரிரு மணி நேரங்கள் கடந்த பின்னரே மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினார்கள். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை. பப்புவாவில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்ட ஒரு மணி நேரத்தில் இந்தோனேஷியாவில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக சுலவேசி தீவை சுனாமி தாக்கியது. இதில் 2200 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர்.

மூலக்கதை