ஜாகீர் நாயக்கை அனுப்ப முடியாது: மலேசிய பிரதமர் அறிவிப்பு

தினமலர்  தினமலர்
ஜாகீர் நாயக்கை அனுப்ப முடியாது: மலேசிய பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர் : இந்தியாவில் பயங்கரவாதத்தைப் பரப்பியது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி மலேசியாவிற்கு தப்பிச் சென்ற இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்தமாட்டோம் என மலேசிய பிரதமர் மகாதிர் முகமது கூறியுள்ளார்.


மும்பையைச் சேர்ந்த 'இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்' அமைப்பின் நிறுவனர் ஜாகீர் நாயக் 53. இவர் மீது இளைஞர்களை பிற மதத்தினருக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட துாண்டியது மற்றும் கறுப்பு பண மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் 2016 ஜனவரியில் இந்தியாவில் இருந்து வெளியேறி மலேசியாவில் தஞ்சமடைந்தார். அங்கு நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுள்ளார்.

இவருக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் நிதி வந்துள்ளது. அப்பணத்தில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தன் பெயரிலும் குடும்பத்தினர் பெயரிலும் கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். இவை அனைத்தும் கறுப்புப் பணமாகும்.


இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவரை மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ''இந்தியாவில் நியாயமான விசாரணை நடைபெறாது என ஜாகீர் நாயக் கருதுகிறார். எனவே அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மாட்டோம். அதற்கான உரிமை மலேசியாவுக்கு உள்ளது'' என அந்நாட்டு அதிபர் மகாதிர் முகமது கூறியுள்ளார்.

மூலக்கதை