உத்திரமேரூர் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
உத்திரமேரூர் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி.

இவரது மனைவி எல்லம்மாள். இவர்களது மகள் தேவகி (20).

இவருக்கும், தேவகிக்கும் திருப்புலிவனத்தில் உள்ள உறவினர் சிங்காரம் (28) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தேவகிக்கு, திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கணவருடன் அடிக்கடி சண்டை போட்டு விட்டு, பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவாராம். பெற்றோர், அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

நேற்று முன்தினமும் இதுபோன்று சண்டை போட்டு விட்டு, பெற்றோர் வீட்டிற்கு தேவகி சென்றுள்ளார். இதனால் கோபம் அடைந்த பெற்றோர், தேவகியை கண்டித்துள்ளனர்.



நேற்று மிகுந்த மன வருத்ததில் இருந்த தேவகி, பெற்றோர் வேலைக்கு சென்றதும், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோர், மகள் தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தேவகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை