உலகக்கோப்பை கிரிக்கெட்;வார்னர் சதம் விளாசல்: பாகிஸ்தான் அணிக்கு 308 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

தினகரன்  தினகரன்
உலகக்கோப்பை கிரிக்கெட்;வார்னர் சதம் விளாசல்: பாகிஸ்தான் அணிக்கு 308 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

டவுன்டன்: டவுன்டன் கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 308 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபாரஸ் அகமது முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்க ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது. ஆஸ்திரேலியா அணியில் அதிகப்பட்சமாக டேவிட் வார்னர், 111 பந்துகளில் 1 சிக்ஸ், 11 பவுன்ரிகள் என 107 ரன்கள் எடுத்தார். அணியின் கேப்டன் அரொன் பிஞ்ச் 84 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். 

மூலக்கதை