கல்லைக் கூட விட்டு வைக்க மாட்டீங்களா?: கஸ்தூரி ஆவேசம்

தினமலர்  தினமலர்
கல்லைக் கூட விட்டு வைக்க மாட்டீங்களா?: கஸ்தூரி ஆவேசம்

செல்போனில் போட்டோ எடுக்கும் வசதி வந்த பின், என்ன செய்கிறோம்; எதற்காக செய்கிறோம் என்பதே புரியாமல் பலரும் செய்து கொண்டிருக்கின்றனர். திருச்சி செங்குளம் பகுதியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்ற இளைஞன், கடந்த சில நாட்களுக்கு முன், தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்.

அங்கே பல விதமான புகைப்படங்கள் எடுத்து கொண்டார். பின், அங்குள்ள பெண் சிலைகளோடு கட்டிபிடித்து, முத்தம் கொடுத்து படம் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களையெல்லாம், சமூக வலைதளங்களிலும் அவர் பகிர்ந்துள்ளார். இது, பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இது தொடர்பாக, முஜிபுர் ரஹ்மான் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதை வைத்து, போலீஸார் முஜிபுர் ரஹ்மான் மீது வழக்குப்பதிவும் செய்து கைது செய்தனர்.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி, தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய கருத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ரம்ஜான் கொண்டாடினானாம்! வாக்குமூலம் குடுத்துருக்கான். ச்சை! பொம்பள மாதிரி இருந்தா, கல்லை கூட விட்டு வைக்க மாட்டீங்களாடா? முஜிபுர் ரஹ்மான்! எவ்வளவு பெரிய தலைவர் பேரை வச்சிக்கிட்டு எவ்வளவு சின்ன புத்தி செயல்!

இவ்வாறு கஸ்தூரி, அந்தப் பதிவில் கூறியிருக்கிறார்.

பிடிச்சு ஜெயில்லே போட்டுட்டாங்க. ரம்ஜான் கொண்டாடினானாம் ! வாக்குமூலம் குடுத்துருக்கான். ச்சை ! பொம்பளமாதிரி இருந்தா கல்லை கூட விட்டு வைக்கமாடீங்களாடா? முஜிபுர் ரஹ்மான் ! எவ்வளவு பெரிய தலைவர் பேரை வச்சிக்கிட்டு எவ்வளவு சின்ன புத்தி செயல்! pic.twitter.com/MERdD30Pu5
— Kasturi Shankar (@KasthuriShankar) June 11, 2019


பிடிச்சு ஜெயில்லே போட்டுட்டாங்க. ரம்ஜான் கொண்டாடினானாம் ! வாக்குமூலம் குடுத்துருக்கான். ச்சை ! பொம்பளமாதிரி இருந்தா கல்லை கூட விட்டு வைக்கமாடீங்களாடா? முஜிபுர் ரஹ்மான் ! எவ்வளவு பெரிய தலைவர் பேரை வச்சிக்கிட்டு எவ்வளவு சின்ன புத்தி செயல்! pic.twitter.com/MERdD30Pu5
— Kasturi Shankar (@KasthuriShankar) June 11, 2019

மூலக்கதை