சின்னத்திரை நடிகர்கள் கலைநிகழ்ச்சி: மலேசியாவில் நடக்கிறது

தினமலர்  தினமலர்
சின்னத்திரை நடிகர்கள் கலைநிகழ்ச்சி: மலேசியாவில் நடக்கிறது

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் கட்டட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இதுகுறித்து சங்கத்தின் தலைவர் ரவிவர்மா நிருபர்களிடம் கூறியதாவது:

சின்னத்திரை நடிகர் சங்கம் 2003ம் ஆண்டு துவக்கப்பட்டது. ஆனால் இதுவரை சங்கம் வாடகை கட்டடத்தில்தான் இயங்கி வருகிறது. சங்கத்திற்கு சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கனவாகும். அதை இப்போது நிறைவேற்ற இருக்கிறோம்.

சின்னத்திரை நடிகர், நடிகைகள் பங்கேற்கும் பிரமாண்ட கலை நிகழ்ச்சியை மலேசியாவில் நடத்த இருக்கிறோம். வருகிற ஆகஸ்ட் மாதம் 17ந் இந்த நிகழ்ச்சி, மலேசியாவின் ஷாஅலாம் ஷிலாங்கர் மெலாவாட்டி அரங்கில் நடக்கிறது. மலேசிய அரசின் உதவியுடன் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

சின்னத்திரை நடிகர் நடிகைகளின் நடன நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி, நாடகங்கள் உள்ளிட்ட அனைத்து கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பெரிய திரை நடிகர்களும் கலந்து கொள்கிறார்கள். இதில் கிடைக்கும் நிதியை கொண்டு சின்னத்திரை நடிகர் சங்கதிற்கு சொந்த கட்டடம் கட்டப்படும் என்றார். பேட்டியின் போது நடிகர்கள் ஆடுகளம் நேரன், மனோபாலா, சின்னி ஜெயந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

மூலக்கதை