வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை: டிக்-டாக் ஆப் மூலம் தற்கொலை காட்சியை வெளியிட்டார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை: டிக்டாக் ஆப் மூலம் தற்கொலை காட்சியை வெளியிட்டார்

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம்  சீராநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி அனிதா (24).   இவர்களுக்கு  5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

பழனிவேல் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அனிதா 2 குழந்தைகளுடன் சீராநத்தம் கிராமத்தில் வசித்து வந்தார்.   கணவர் மாதந்தோறும் பணம் அனுப்பி வந்தார்.   இந்த நிலையில் வெளிநாட்டில் இருக்கும், கணவருக்கும், அனிதாவுக்கு சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

போனில் அவர் மனைவியை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த  அனிதா நேற்று முன்தினம் மாலை விவசாய நிலத்துக்கு அடிப்பதற்காக வைத்திருந்த களைக்கொல்லி விஷத்தை  எடுத்து குடித்தார்.

பின்னர் தண்ணீர் குடிக்கிறார்.

இந்த காட்சியை அவர் போனில் டிக்டாக் ஆப் மூலம் பதிவு செய்து வெளியிட்டு உள்ளார். விஷம் குடித்ததும் மயங்கிய நிலையில் இருந்த அனிதாவை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதுகுறித்து குன்னம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை