ஜி-7 மாநாடு: மோடிக்கு பிரான்ஸ் அதிபர் அழைப்பு

தினமலர்  தினமலர்
ஜி7 மாநாடு: மோடிக்கு பிரான்ஸ் அதிபர் அழைப்பு

புதுடில்லி: பிரான்சில் நடக்க உள்ள ஜி-7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அந்நாட்டு அதிபர் இமானுவெல் மெக்ரான், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தியில், ஜி-7 நாடுகளின் 45-வது உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டின் பையாரிட்ஜ் நகரில் வரும் ஆக .24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடக்கிறது.இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மெக்ரான் அழைப்பு விடுத்துள்ளார். அதனை பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டுள்ளது..இ்வ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை