நடிகர் படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்ட நடிகை

தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை, தற்போது ஒரு நடிகருடன் நடிக்க படக்குழுவினரிடம் அதிக சம்பளம் கேட்டிருக்கிறாராம்.
முன்னணி நடிகையாக வலம் வந்த யாம்பல் நடிகை, நட்சத்திர நடிகருடன் நடித்த பிறகு அதிக சம்பளம் கேட்ட பிரச்சனையால் மார்க்கெட்டை இழந்தாராம். இதனால் பல படங்கள் இவர் கையை விட்டு சென்றதாம். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வருகிறாராம்.
இவரை இயக்குனர் ஒருவர் அணுகி படத்தில் நடிக்க கேட்டாராம். நடிகையும் கதையை கேட்டு ஓகே சொன்னாராம். ஆனால், பசங்க நடிகர்தான் கதாநாயகன் என்று சொன்னவுடன் அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம். படக்குழுவினரும் பரவாயில்லை என்று நடிகை சம்பளம் அதிகம் தர சம்மதித்திருக்கிறார்களாம்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
மூலக்கதை
